இன்று நாம் சென்னையின் ஜியோர்ஜ் டவுன் என்ற ஒரு பகுதியைப் பற்றி அறிந்திருப்போம். 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் வந்து கைப்பற்றிய போது இப்பகுதியில் கோட்டையைக் கட்டினர். இப்பகுதியை வெள்ளை நகரம் எனப் பெயரிட்டனர். கோட்டைக்கு வடக்கில் ஒரு நகரத்தை அமைத்தனர். இதற்குக் கருப்பு நகரம் எனப் பெயரிட்டனர். கருப்பர் நகரத்தில் தமிழர்களும் வெள்ளை நகரத்தில் ஆங்கிலேயர்களும் இருப்பது போல அமைத்தார்கள். இது பற்றி பல தகவல்களை இந்தப் பேட்டியில் வழங்குகிறார் தமிழக வரலாற்று அறிஞர் திரு.நரசய்யா.