கடந்த 11.1.2020 தமிழ் மரபு அறக்கட்டளை தமிழகத்தின் வட சென்னை பகுதியில் ஒரு மரபு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தோம். அதில் சென்னையில் பாதுகாப்பற்று படிப்படியாக சிதைந்து மறைந்தும் அதன் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்ற வரலாற்று சின்னங்களை பார்த்து அவை பற்றிய தகவல்களை புரிந்து கொள்ளும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட பதிவுகள் படிப்படியாக எல்லோரும் பார்த்து பயன் அடையும் வகையில் பகிர்ந்து கொள்ளப்படும்.