Home Education வடசென்னை – நம்ம மெட்ராஸ் – பூந்தமல்லி ராஜகோபால் பள்ளி

வடசென்னை – நம்ம மெட்ராஸ் – பூந்தமல்லி ராஜகோபால் பள்ளி

by Dr.K.Subashini
0 comment

கல்வித் தந்தை என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒருவராக பூந்தமல்லி ராஜகோபால் அவர்களைக் குறிப்பிடலாம். தமது சிறுவயதில் கிறித்துவ சமயத்தைத் தழுவிய இவர், பிற்காலத்தில் விடுதலை தேவாலயத்தின் முதல் இந்திய பாஸ்டராகவும் பணியேற்றார். கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனமக்களுக்காகவும், பெண் இனத்திற்காகவும் இவர் 19 ஆம் நூற்றாண்டில் சென்னை ராயபுரம் பகுதியில் துவக்கிய பள்ளிகள் இந்நாட்களிலும் சி.எஸ்.ஐ. ராஜகோபால் பள்ளிகளாக கல்விப் பணியைத் தொடர்ந்து வருகின்றன.

தமிழ் மரபு அறக்கட்டளை 11.1.2020 அன்று ஏற்பாடு செய்த வடசென்னை மரபு பயண நிகழ்வில் ஆய்வாளர் நிவேதிதா இப்பள்ளியைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை விவரிக்கின்றார்.

வாருங்கள்.. வரலாற்றை அறிவோம்!

You may also like

Leave a Comment