டிஜிட்டல் மெட்ராஸ் திட்டம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க உலக நகரங்களுள் ஒன்று என்ற பெருமை மெட்ராஸுக்கு உண்டு. இன்றைய காலகட்டத்தில் மெட்ராஸ் நகரில் உள்ள பண்டைய புராதனச் சின்னங்களும், வரலாற்றுச் சின்னங்களும், ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் அழிந்தும் மறைந்தும் அதன் பெறுமைகளை இழந்து கொண்டிருக்கின்றன. மெட்ராஸின் வரலாற்றை அறிந்து, இந்த நகரின் சிறப்பை உணர்ந்து, இதன் வரலாற்றைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் டிஜிட்டல் மெட்ராஸ் திட்டம்.  

—   டாக்டர்.க.சுபாஷிணி, டிஜிட்டல் மெட்ராஸ் திட்ட பொறுப்பாளர்.

by Dr.K.Subashini

தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பின் வெவ்வேறு முயற்சிகளில் ஒன்றாக அமைகின்றது டிஜிட்டல் மெட்ராஸ் எனும் இத்திட்டம். இதன் தொடக்கவிழா 24.8.2019 அன்று தமிழகத்தில் தலைநகர் சென்னையில் நடைபெறுகின்றது. அந்த நிகழ்ச்சியில் தலைமையுரை இங்கே. – டாக்டர்.க.சுபாஷிணி

People

by Dr.K.Subashini

இன்று நாம் சென்னையின் ஜியோர்ஜ் டவுன் என்ற ஒரு பகுதியைப் பற்றி அறிந்திருப்போம். 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் வந்து கைப்பற்றிய போது இப்பகுதியில் கோட்டையைக் கட்டினர். இப்பகுதியை வெள்ளை நகரம் எனப் பெயரிட்டனர். கோட்டைக்கு வடக்கில் ஒரு நகரத்தை …